அறிமுகம்
கேரளத்தின் மலபார், கர்நாடகத்தின் மங்களுர், ஆந்திரத்தின்
விசாகப்பட்டினம், சென்னை ராஜதானியின் 25 மாவட்டங்கள் உள்ளடங்கியது சென்னை இராஜதானி
முதன் முதலில் மலபாரில்தான் ஆசிரியர் சங்கம் உதயமானது. கோழிக்கோடு, வளநாடு, பொன்னாஜி,
பாலக்காடு ஆகிய பகுதிகளில் பகுதிவாரியாகவும், தாலுகா அளவிலும் அகில மலபார் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்
சங்கம் 1936ல் வடகரையில் உருவாக்கப்பட்டது.
ஆரம்பப்பள்ளி முதல் கல்லுரி வரை பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட சங்கமாக
தென்னிந்திய ஆசிரியர் சங்கம் செயல்படத் தொடங்கியது. SITU(South Indian Teachers'
Union) அமைப்பில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதன்மையாக்கப்படவில்லை.
சங்க பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை. 1946ல் பெல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில்
ஈ.எம்.சுப்பிரமணியம் தலைவராகவும் வா.இராமுண்ணி பொதுச்செயலாளராகவும் கொண்ட சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்
என்னும் புதிய சங்கம் அமைக்கப்பட்டது.
அம்மாநாட்டில் ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, ரூ.18, ரூ.50 எனவும் ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் என்பதை மாற்றி மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.
அம்மாநாட்டில் ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, ரூ.18, ரூ.50 எனவும் ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் என்பதை மாற்றி மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.
மிதிவண்டி பிரச்சாப் பயணம்
மாஸ்டர் இராமுண்ணி தலைமையில்
13.01.1947 அன்று மிதிவண்டி பிரச்சாரப்பயணமாக கோழிக்கோட்டிலிருந்து 19 ஆசிரியர்கள்
பயணம் மேற்கொண்டு பாலக்காடு, கோவை, சேலம், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 30.01.1947 அன்று
சென்னையை அடைந்து முதல்வர் பிரகாசத்திடம் மாநாட்டுத் தீர்மானங்களை அளித்தார். 1949ல்
சென்னை இராஜதானியின் தலை நகரான சென்னையில் முதல் மாநாடு நடத்தப்பட்டது. அது முதல் மாஸ்டர்
சென்னையில் குடியேறி பொதுச்செயலாளர் பணியை ஆற்றினார்.
1952ல் முதல்வர் இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற 2ம் மாநில மாநாட்டில் தீர்மானம் இடப்பட்டது தஞ்சையில் இராமையாத்தேவர், சேலத்தில் ராமசாமி ரெட்டியார் தலைமையில் 2வது மதிவண்டிப் பேரணி நடத்தப்பட்டு அது சென்னையை அடைந்தது. 1956ல் மொழி வழி மாநிலங்கள் உருவானதால் சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளம் என்பது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யபட்டது.
அன்னை இந்தியா விடுதலை பெற வேண்டும் அன்னிய ஆட்சி அகற்றப் பட வேண்டும், என்ற தீரமானத்தை நிறைவேற்ற அன்றைய தலைமை மறுத்து வெளி நடப்பு செய்த சமயத்தில் மாஸ்டர இராமுண்ணி தலைமைப் பொறுப்பை ஏற்று அத்தீரமானத்தை நிறைவேற்றினார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் நாட்டு நலனில் அக்கறையும் கொண்ட இலட்சியத்தோடு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இடைக்காலத்தில் திசைமாறிப்போனது. சங்க ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு சுயநலம், துரோகத்தன்மை, சந்தரப்பவாதம் கொண்ட தலைமையிடமிருந்து 02.08.1984ல் நாம் வெளியேறினோம். அரசு அமைச்சர்கள், ஆளுங்கட்சித்தலைவர்கள், உயர் அலுவலர்களுக்கு விசுவாசும் உள்ளவர்களாக மாறி உறுப்பினர்களின் நலன்களை அடகு வைக்கவும், சங்க அங்கீகாரம் பெறுவதும் அதைப்பாதுகாப்பதும் ஆக மாறிய போலித் தலைமையைத் துக்கி எறிந்து புதிய தலைமை தேரந்தெடுக்கப்பட்டது. ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் உறுதியோடு தொடர்ந்து போராடும் ஒரு உன்னத அமைப்பாக உருவாக்கப்பட்டது.
1979ல் உள்ளாட்சி நிறுவனங்கள் அதிகார தலையீடு அதிகாரத் துஷ்பிரயோகம் விதி மீறல்கள்பென்சன் உள்ளிட்ட சலுகைகளுக்காக மறியல் போராட்டம்.
1981ல் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி நடைபெற்ற மறியல் போராட்டம், 1983ல் கல்வியல்லாத பிற பணிகளிலிருந்து விடுவிக்க நடைபெற்ற மறியல் போராட்டம் போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஈடுபடுத்தி சிறைக்கனுப்பி குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பலன்களையும் பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர்கள் நாம்.
1946 முதல் 02.08.1984 வரை உள்ள 50 ஆண்டுகளின் வரலாறும் படிப்பினைகளும் நமது உழைப்பும் தியாகமும் இணைந்த வரலாறு ஆகும்.
நமது உழைப்பும், தியாகமும் 1983ல் நடந்த வட்டார-நகர-மாவட்டத் தேர்தல்களில் பிரதிபலித்தது. இராமேஸ்வரத்தில் நடந்த மாநிலத்தேர்தலிலும் பிரதிபலித்தது எதேச்சதிகாரத் தலைமை கிளை உறுப்பினரை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை 05.02.1984ல் முன் வைத்தது. அதனை எதிரத்து 9 மாவட்டச் செயலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். 1984 மே மாதத்தில் மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழுவில் அடிதடி நடைபெற்றது. 02.08.1984ல் 9 மாவட்டச் செயலாளர்களை டிஸ்மிஸ் செய்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
1952ல் முதல்வர் இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற 2ம் மாநில மாநாட்டில் தீர்மானம் இடப்பட்டது தஞ்சையில் இராமையாத்தேவர், சேலத்தில் ராமசாமி ரெட்டியார் தலைமையில் 2வது மதிவண்டிப் பேரணி நடத்தப்பட்டு அது சென்னையை அடைந்தது. 1956ல் மொழி வழி மாநிலங்கள் உருவானதால் சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளம் என்பது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யபட்டது.
அன்னை இந்தியா விடுதலை பெற வேண்டும் அன்னிய ஆட்சி அகற்றப் பட வேண்டும், என்ற தீரமானத்தை நிறைவேற்ற அன்றைய தலைமை மறுத்து வெளி நடப்பு செய்த சமயத்தில் மாஸ்டர இராமுண்ணி தலைமைப் பொறுப்பை ஏற்று அத்தீரமானத்தை நிறைவேற்றினார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் நாட்டு நலனில் அக்கறையும் கொண்ட இலட்சியத்தோடு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இடைக்காலத்தில் திசைமாறிப்போனது. சங்க ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு சுயநலம், துரோகத்தன்மை, சந்தரப்பவாதம் கொண்ட தலைமையிடமிருந்து 02.08.1984ல் நாம் வெளியேறினோம். அரசு அமைச்சர்கள், ஆளுங்கட்சித்தலைவர்கள், உயர் அலுவலர்களுக்கு விசுவாசும் உள்ளவர்களாக மாறி உறுப்பினர்களின் நலன்களை அடகு வைக்கவும், சங்க அங்கீகாரம் பெறுவதும் அதைப்பாதுகாப்பதும் ஆக மாறிய போலித் தலைமையைத் துக்கி எறிந்து புதிய தலைமை தேரந்தெடுக்கப்பட்டது. ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் உறுதியோடு தொடர்ந்து போராடும் ஒரு உன்னத அமைப்பாக உருவாக்கப்பட்டது.
1979ல் உள்ளாட்சி நிறுவனங்கள் அதிகார தலையீடு அதிகாரத் துஷ்பிரயோகம் விதி மீறல்கள்பென்சன் உள்ளிட்ட சலுகைகளுக்காக மறியல் போராட்டம்.
1981ல் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி நடைபெற்ற மறியல் போராட்டம், 1983ல் கல்வியல்லாத பிற பணிகளிலிருந்து விடுவிக்க நடைபெற்ற மறியல் போராட்டம் போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஈடுபடுத்தி சிறைக்கனுப்பி குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பலன்களையும் பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர்கள் நாம்.
1946 முதல் 02.08.1984 வரை உள்ள 50 ஆண்டுகளின் வரலாறும் படிப்பினைகளும் நமது உழைப்பும் தியாகமும் இணைந்த வரலாறு ஆகும்.
நமது உழைப்பும், தியாகமும் 1983ல் நடந்த வட்டார-நகர-மாவட்டத் தேர்தல்களில் பிரதிபலித்தது. இராமேஸ்வரத்தில் நடந்த மாநிலத்தேர்தலிலும் பிரதிபலித்தது எதேச்சதிகாரத் தலைமை கிளை உறுப்பினரை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை 05.02.1984ல் முன் வைத்தது. அதனை எதிரத்து 9 மாவட்டச் செயலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். 1984 மே மாதத்தில் மதுரையில் நடந்த மாநிலச் செயற்குழுவில் அடிதடி நடைபெற்றது. 02.08.1984ல் 9 மாவட்டச் செயலாளர்களை டிஸ்மிஸ் செய்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயம்
அதே நேரத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெரு கனக வேல் திருமண
மண்படத்தில் வீரம் செறிந்த இயக்கமாக உருவானது தான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி.
அரசின் அங்கீகாரம் ஒன்றே பிரதானம் என்பதைத் தகரத்து கூட்டமைப்புகளுக்கு அவசியம் இல்லை எனும் தவறான முடிவை மாற்றியமைத்து ஜாக்சாட்டோ, ஜாக்டா, ஜேக்டீ, அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு டிட்டோஜாக் ஜாக்டோஜியோ- ஜாக்டோ - ஜியோ- கோட்டாஜியோ போன்ற கூட்டமைப்புகளை உருவாக்கி நமது முன் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் போன்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம்.
அரசின் அங்கீகாரம் ஒன்றே பிரதானம் என்பதைத் தகரத்து கூட்டமைப்புகளுக்கு அவசியம் இல்லை எனும் தவறான முடிவை மாற்றியமைத்து ஜாக்சாட்டோ, ஜாக்டா, ஜேக்டீ, அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு டிட்டோஜாக் ஜாக்டோஜியோ- ஜாக்டோ - ஜியோ- கோட்டாஜியோ போன்ற கூட்டமைப்புகளை உருவாக்கி நமது முன் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் போன்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம்.
முதல் மாநில மாநாடு
1970 முதல் 1985 வரை ஏற்பட்டிருந்த பொருளாதார இழப்புகளைச்சுட்டிக்காட்டி
முதல் மாநாட்டை 05.05.1985ல் சென்னையில் நடத்தினோம். இழப்புகளை மீட்க இயக்கங்களின்
மகத்தான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என அம்மாநாட்டில் அறைகூவல்விடப்பட்டது. 4வது ஊதியக்குழுவில்
வெறும் 7சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி 11.07.1985 அன்று சென்னையில் 5000 பேர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தியதன் விளைவாக தொடக்க நிலையில் இருந்த மூன்று சங்கங்கள் இணைந்து ஜாக்டோ உதயமாகியது.
ஜாக்டோ என்னும் சீறுதீ காட்டுத் தீயாக மாறி ஜாக்டீ என்னும் பதாகையின் கீழ் வேலை நிறுத்தம்
மறியல் போராட்டம். 1985 நவம்பர் 3 அரசாணை எதிர்ப்பு போராட்டம் வரை நடத்தப்பட்டது. கர்ப்பிணி
பெண்கள் கைக்குழந்தைகளுடன் 10000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 65000 ஆசிரியர்கள்
தீபாவளித் திருநாளிலும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40 நாள் சிறையில் அடைத்தும் அன்றைய
முதல்வர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என மிரட்டியும் பணியவைக்க முயன்றார்.
இறுதியில் வரலாறு காணாத எழுச்சியின் காரணமாக அரசு பணிந்தது. இவ்வீரம் செறிந்த வேலை
நிறுத்தத்தில் தாய் இயக்கம் என்றும் பேரியக்கம் என்று கூறிகொள்பவர்கள் அவர்களின் இயல்பான
குணங்களின் காரணமாக இடையில் வந்து இணைந்து போராட்டத்திலிருந்து போன வரலாற்று கறுப்பு
நிகழ்வுகளும் நடந்தது உண்டு.
இரண்டாம் மாநில மாநாடு
மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழு அறிவிப்பு மத்திய அரசிற்கு
இணையான ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் வஞ்சிக்கப்பட்ட
ஆசிரியர்களிடயே ஏற்பட்டது. 5-6.03.1988 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் மாநில மாநாடு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வேண்டும்
என்ற கோரிக்கையை பிரகடனப்படுத்தி ஆசிரியர் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைத்தது. இக்கோரிக்கையை
அடைய அரசு ஊழியர்களும் இணைந்த பரந்து விரிந்த ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்தியது.
ஜேக்டீ அரசு ஊழியர இயக்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டு மகத்தான வேலைநிறுத்தம்
1988 ஜுன் 22 முதல் ஜுலை 22 வரை 31 நாட்கள் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தனிப்பெரும்
முதல் பெரும் சக்தியாக நாம் பங்கேற்று உருக்கு போன்ற போராட்டக் குணத்தை நிலைநாட்டினோம்.
அன்றைய ஆளுனர் திரு.அலெக்சாண்டர் அவர்களால் இக்கோரிக்கைகள் கொள்கை அடிப்படையில் ஏற்கப்பட்டு
அதை நடைமுறைப்படுத்த 5ம் ஊதிக்குழு அமைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோரிக்கை
05.06.1989 அன்று 5ம் ஊதியக்குழுவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 01.06.1988 முதல் மத்திய
அரசிற்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்டது. இவ்வீரஞ்செறிந்த போராட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் ரூ.70 மருத்துவப்படி
ரூ.15க்கும் துரோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இடையில் போராட்டத்திற்கு வந்து இடையில்
ஓடிய துரோகிகளும் உண்டு.
மூன்றாம் மாநில மாநாடு
நாட்டின் சுந்ததிரம் பாதுகாக்கப்பட, தேசிய ஒருமைப்பாடு,
கல்விக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக உருவாக்கப்பட மத்திய அரசு கல்விக்கு 10 சதவீதமும்,
மாநில அரசு 30 சதவீதமும் நிதி ஒதுக்கிட வேண்டும் என வலியுறுத்தி 21, 22 மார்ச் 1992
தேதிகளில் மூன்றாம் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. முதன் முதலாக பெண் ஆசிரியர்
மாநாடும் அம்மாநாட்டில் நடத்தபட்டது.
நான்காம் மாநில மாநாடு
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையின்
பேரில் தனியார் மயம், தாராளமமயம், உலகமயம் என்னும் பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை
தனியார் மயமாக்கும் ஆபத்து அதிகரித்துவந்தது. மாணவர் நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன்களுக்கு
எதிராக மத்திய அரசின் கல்விக் கொள்கையின் மாற்றம் என்னும் ஆபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக
சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் தங்களது கொடிய பாதங்களை கால்பதிக்கத் துவங்கின. 1964 முதல்
நடைமுறையில் இருந்து வந்த ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 என்பது 1:40 ஆக உயர்த்தி
ஆணையிடப்பட்டது. இவைகளை எதிர்க்க வலியுறுத்தி அறைகூவல்செயல் திட்டங்களை வகுத்துக் கொடுத்த
மாநாடு தான் சென்னையில் 3, 4 மே-1998 ல் நடைபெற்ற நான்காம் மாநில மாநாடு.
ஐந்தாம் மாநில மாநாடு
பொதுக்கல்வியைப்
பாதுகாப்பது - பலப்படுத்துவது,ஆசிரியர் காலிப்பணியடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு
சம ஊதியம் என்னும் உச்சநீதிமன்றத்தீர்ப்பிற்கு எதிராக இயற்கை நியதி மற்றும் சமுகநீதிக்கு
முரணாக அமுல்படுத்தி வரும் தொகுப்பு ஊதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம்
வழங்கிட வேண்டும். கற்பித்தல் பணி சாராத பிற பணிகளிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக
விடுவிக்க வேண்டும்.
வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் எஸ்மா டெஸ்மா சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். போராடிப் பெற்ற போனஸ், சரண்டர் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வு காலச் சலுகைகள் மற்றும் கருணை அடிப்படை நியமனம் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது போல் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் - அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 5ம் மாநில மாநாடு கோவையில் 4, 5, 6 மே 2005 தேதிகளில் நடைபெற்றது.
வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் எஸ்மா டெஸ்மா சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். போராடிப் பெற்ற போனஸ், சரண்டர் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வு காலச் சலுகைகள் மற்றும் கருணை அடிப்படை நியமனம் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது போல் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் - அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 5ம் மாநில மாநாடு கோவையில் 4, 5, 6 மே 2005 தேதிகளில் நடைபெற்றது.